Friday, October 29, 2010

கொலையாளியும் நீதிமன்றமும்

               சுஷ்மா திவாரி என்னும் 25 வயதுப் பெண்ணின் கதை அது.


அவள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிராமண சாதிப்பெண்.மும்பையில் அவள் குடும்பம் வசிக்கிறது.அவள் கேரளத்தின் கீழ்ச்சாதியான ஈழவ சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்கிற இளைஞனைக் காதலித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டாள்.
ஆத்திரமடைந்த சாதி அவளுடைய அண்ணன் திலிப் திவாரியின் ரூபத்தில் தடியெடுத்து நின்றது.தங்கையின் செயலால் ஆத்திரமடைந்த திலிப் சுஷ்மாவின் வீட்டுக்குச் செல்கிறான்.அங்கே அவள் இல்லை.கர்ப்பிணியான அவள் அப்போது வெளியே போயிருந்தாள்.
அவளுடைய அன்புக்கணவன் பிரபு,பிரபுவின் அப்பா மற்றும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை அந்த இடத்திலேயே கொன்றுபோட்டுவிட்டு திலிப் வெளியேறினான் தன் கொலையாளிச் சகாக்களுடன்.


வெளியே போனதால் சுஷ்மா தப்பினாள்.அவள் அண்ணனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திப்போராடி மும்பை கோர்ட்டிலும் பின்னர் மராட்டிய உயர்நீதிமன்றத்திலும் போராடி அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தருகிறாள்.


அவன் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறான்.சுப்ரீம் கோர்ட் தூக்குத் தண்டனை தேவையில்லை 25 ஆண்டு சிரை மட்டும் போதும் என்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது:


The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”
It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “


சாதிய சமூகத்தில் பாவம் அண்ணன்காரன் என்ன செய்வான்.ஆத்திரப்படத்தானே வேண்டியிருக்கிறது என்கிர தொனியிலான இத்தீர்ப்பு சாதி மீறிய காதலுக்கு எதிரான தீர்ப்பாக அமைந்துவிட்டது.சுஷ்மா மனம் தளர்ந்துவிடவில்லை.இன்னும் போராடிக்கொண்டிருக்கிறாள்.இது 1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்துக்கே விரோதமான தீர்ப்பாகும். சமீபத்தில் பெங்களூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் நடத்திய இளம்பெண்கள் மாநாட்டில் பங்கேற்றுபேசிய அவர் நான் எனக்காகவும் என் 5 வயது மகள் த்ரிஷ்னாவுக்காகவும் மட்டும் போராடவில்லை.வரும் வரும் தலைமுறைக்காகப் போராடுகிறேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.அவர் வெற்றி பெற வேண்டும்.
கம்பத்து கட்டப் பஞ்சாயத்துத்தான் டெல்லியிலும் எதிரொலிக்கிறது. சட்டம் படித்துத்தான் நீதிபதிகளெல்லாம் கோர்ட்டுக்கு வருகிறார்களா?என்கிர கேள்வி நமக்கு எழுகிறது.இது உச்சநீதிமன்றம் அல்ல.உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது 2010 லாவது பொய்யாக வேண்டாமா?
கண்களில் நீர்கசிந்தாலும் மனதை இறுக்கிக் கொண்டு போராடும் நம் அன்புமகள் சுஷ்மாவுடன் நம் எல்லோருடைய மனமும் துணை நிற்கிறது.


இந்துப் பத்திரிகை
மார்ச்

Monday, October 25, 2010

கல்வி குறித்து பெரியார்

பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத் திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்குணமும் முக்கிய பரீட்சையாக இருக்க வேண்டும். அந்த பரீட்சையும், உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில் தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே ஒழிய, பள்ளிக் கூடத்தில் ஒவ்வொரு வருஷமும் பரீச்சை என்பது தேவையில்லாததாகும்.

எந்த உத்தியோகத்துக்கும் அதற்குத் தேவையான அளவுதான் தகுதி வைக்க வேண்டும்.

பள்ளிப்படிப்பில், ஒரு மாணவன் வகுப்பில், இத்தனை நாள் கிரமப்படி ஆஜராகி விஷயங்களைச் சரிவரக் கவனித்துக் கொண்டிருந்த காலம் தீர்ந்தால் போதும் என்று மேல் வகுப்புக்கு அனுப்பப்பட வேண்டும். பரீச்சை மூலம் மக்களைப் பள்ளியில் மேல் வகுப்புக்குச் செலவிடாமல் கழிக்கக்கூடாது, நிறுத்தக்கூடாது.

பொதுப் படிப்புக்கு ஆக ஒரு பையன் 15-வருடம் அதாவது வருடத்திற்கு ஒரு வகுப்புத் தேறினாலும் பி.ஏ. முடிக்க 15-வருடம் படிக்க வேண்டும் என்றால், இது மிகவும் அநீதியான காரியமாகும். ஏனெனில் ஆறாம் வயதில் பையன் படிக்கத் தொடங்கினால் பி.ஏ.க்கு 21-வருடம் ஆகிவிடுகிறது. அப்பறம் தொழில் படிப்புப் படிக்க 3, 4, 5-வருடங்கள் தேவைப்படுகிறது. பிறகு அவன் அதில் அனுபவம் பெற்றவனாவதற்கு 4, 5-வருடமாகும். இவற்றால் பையனின் நல்ல மூர்க்கதண்யமான ஆயுட்காலம் வீணாகப் போகிறதல்லாமல் பெற்றோர்களுக்கும் எவ்வளவு பணம், எவ்வளவு நாளைச் செலவிட வேண்டி இருக்கிறது. எத்தனை காலத்தை மாணவ வாழ்க்கையில் கழிப்பது? காலம், பணம் செலவழித்தவனுக்கெல்லாம் உத்தியோகம் கிடைக்கின்றதா?

18-வது வயதில் ஒரு பையனைக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதிக்கிறோம். சட்டமும் அனுமதிக்கிறது. அவன் படிப்பு முடிந்து வேலைக்குத் தயாராக மாத்திரம் 22-வயது 25-வயது ஆகவேண்டுமா? தொட்டில் ஒரு கையிலும், புத்தகம் ஒரு கையிலும் பிடித்துக் கொண்டும் மனைவியை ஒரு கண்ணில் பார்த்துக் கொண்டுமா படிப்பது? இளங் குழந்தைகளையும், மனைவியையும் கொஞ்ச நேரமெங்கே? இப்படிப்பட்ட இந்தப்படிப்புச் செல்வவான்களுக்கும், செல்வமில்லா விட்டாலும் படிக்க வசதியும், வாய்ப்பும் உள்ள பிறவியினால் பிறவிச் செல்வர்களான பார்ப்பனர்களுக்கும்தான். அதாவது மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 5, 6-பேர்களுக்குத்தான் ஏகபோக உரிமை உள்ளதாக இருக்கிறதே தவிர ஏழை மக்களுக்கும், புத்தி, சக்தி, திறமை, உலக ஞானம், நற்குணம், நற்செய்கை, நல்ல குண பரம்பரை உள்ள மக்களுக்கும் படிக்க வாய்ப்பில்லாமலே போய்விடுகிறது. ஆகவே, இது வருணாச்சிரம தர்ம முறைக்கேற்றபடி ஏற்படுத்தப்பட்ட படிப்பு முறையாகவே இருக்கிறது. வர்ணாசிரமம் கூடாது என்கின்ற போது வர்ணாசிரமப் படிப்பு முறையும் ஒழித்தாக வேண்டாமா?

ஆதலால் ஒரு அளவுக் கல்வி வரை பொதுக் கல்வியாக எல்லாச் சமுதாய மக்களும் படிக்கும் வயதை வந்த 100-க்கு 100-பேரும் படிக்கும்படியாகக் செய்து விட்டு, உத்தியோகத்திற்கும், தொழிலுக்கும் அவசியமான அளவு கல்வியை மாத்திரம் ஜாதி வகுப்புப் பிரிவு மக்கள் எண்ணிக்கைகள் படி கொடுத்து வரலாம். சர்க்கார் நடப்புக்கு அல்லாமல், அதற்கு வேண்டிய மக்கள் எண்ணிக்கைக்கு அல்லாமல் மேல் படிப்பு என்பதற்கு மக்கள் வரிப்பணத்தில் ஒரு காசும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.

கல்விக்குச் செலவு செய்யப்படும் காசு அவ்வளவும், மக்களை எழுதப்படிக்கக் கணக்குப் போடத் தெரியுமளவுக்கு மாத்திரம் செலவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம் தேவை இல்லை என்று ஆன பிறகு, தமிழ்நாட்டுக்குச் சமஸ்கிருதம் தேவை இல்லை, இந்தி தேவையில்லை என்று ஏன் செய்யக் கூடாது? அப்படி ஏற்பாடு செய்து விட்டால் படிப்பின் தொல்லை பெரும் அளவுக்கு நீங்கிவிடும். அதற்கு ஆகும் காலமும் செலவும் பெரும் அளவுக்கு நீக்கி விடும். கட்டடம், காலேஜ், ஆப்பரட்டஸ், ஆஸ்ட்டல் என்கின்ற பணம் பிடுங்கிப் பேயாட்டமும் வெகு தூரம் குறைந்து விடும், உருப்போடுவதே பரீட்சை யோக்கியதை யாவதும், 15-வருடம் படிப்புக்காகப் பாழாவதும் தானாகக் குறைந்து விடும்.

100-க்கு 75-உபாத்தியாயர்களைப் பெண் உபாத்தியாயர்களாகவே இருக்கச் இருக்கச் செய்யலாம். அல்லது கணவன் மனைவி இருவரையும் ஜோடி உபாத்தியாயர்களாக ஆக்கிச் செலவைச் சிக்கனமாக்கலாம். ஆண் உபாத்தியாயர் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். பெண் உபாத்தியாயர் புருஷனைக் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்கும் மாதம் 100, 200, 300, 500, 1000- வீதம் சம்பளம் தேவைப்படும். ஜோடி உபாத்தியாயர் ஆனால் செலவு சுருக்கலாம்.

ஓலைச் சாலைக் கொட்டகைகள் கல்வி கற்றுக் கொள்ளப் பாமர மக்களுக்குப் போதுமானதாகும்.



"நமது நாட்டில் கல்வி கற்ற மக்கள் எல்லோரையும் அறிவுடையவர்கள் என்று சொல்ல முடியவில்லை; கல்வி வேறு, அறிவு வேறாகவே இருக்கின்றன. கற்றவர்கள் பெரும்பாலும், மூடநம்பிக்கைக்கு உறைவிடமாக விளங்குகின்றனர்; புத்தகப் பூச்சிகளாக வாழ்கின்றனர். பகுத்தறிவுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை; தானே ஒரு காரியத்தைப்பற்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் ஆற்றல் இல்லை; மனித சமூக ஒற்றுமைக்கு எதிராகவுள்ளவைகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். சாதிப்பற்று, சமயப்பற்று, சடங்குகளில் நம்பிக்கை, புராணங்களில் நம்பிக்கை ஆகியவைகள் கற்றவர்களிடம் மலிந்திருக்கின்றன. அவர்கள் சமூகச் சீர்திருத்தவாதிகளின் இயக்கங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களாகவே இருக்கின்றனர்."

மாப்லியை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

பிரெஞ்ச் சிந்தனையாளர் ´ருசோ´ (Rousseau) தன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதிர்வாதம் அதிகமாக வைக்கும் மாற்றுக் கருத்தாளர் ´மாப்லி´ (Mably, 1709 - 1785)

மனிதன் என்பவன் சுதந்திரப் பிறவி. ஆனால் இன்று எங்கு பார்த்தாலும் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருப்பதையே காண்கிறோம்" என்கின்ற ருசோவின் தத்துவத்தை பல சிந்தனையாளர்கள் சிறந்த தத்துவமாக தூக்கி பிடிக்கும் போது மாப்லி (ப்ரெஞ்ச் சிந்தனையாளர்) எதிர்வாதம் வேறு கோணத்திற்கு எடுத்துக்காட்டியது. 

´சமத்துவம்´ என்பது நியாயமான கோரிக்கைதான். ஆனால் மனிதனுக்கு மனிதன் புத்திக்கூர்மை, ஊக்கம், செயல்திறன், பகுப்பாய்வு போன்ற சமாச்சாரங்கள் எல்லோருக்குள்ளும் சமமாகவா இருக்கின்றது என்பதன் அடிப்படையில் மாப்லியின் தத்துவ விளக்கம் செல்கிறது.... 

"இயற்கை மனிதர்கள் அனைவரையும் எல்லாவிதங்களிலும் சமத்துவத்துடனே படைத்திருக்கிறது சிலதை தவீர. பின்னாலில் மனிதர்களுக்குள் முரண்பாடுகளும், வேற்றுமைகளும் உருவாக கல்வி காரணங்களாகின. 

எல்லோருக்கும் கல்வியும், பயிற்சியும் சமமாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. கல்வி கிடைக்காத மனிதர்களை தாழ்ந்த நிலைக்கு சமூகம் வைத்திருக்கிறது. அதன் தாக்கம் அம்மனிதர்களுக்குள் தாழ்வுமனப்பான்மையை ஏற்படுகிறது. பொருளாதாரத்திலும் பின்தங்கி இருக்க வேண்டிய சார்புநிலையை சமூகம் ஏற்படுத்தி விடுகிறது. 

தகுதிக்கு ஏற்ற கல்வி வாய்ப்புகளில் சக மனிதர்கள் தரம் பிரிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். 

பொதுவாகவே, மனிதர்கள் கௌரவம், புகழ் அங்கீகாரத்துக்கு ஆசைப்படுபவர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் மனிதர்கள் அதை உபயோகித்துக் கொள்ளவே விரும்புவார்கள். 
ஆனால், கல்வித் தகுதியின் பேரால் எல்லா வாய்ப்புகளுமே முற்றாக மறுக்கப்படும் மனிதர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அதிருப்தியை எப்படி வெளிப்படுத்துவார்கள்? அவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும், அங்கீகாரங்களும் சமுகத்தில் கிடைக்காத போது மிருகநிலைக்குத்தானே செல்வான்? 

சக மனிதர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? 

எல்லா மனிதர்களுக்கும் கல்வி வாய்ப்பு அளித்திருக்கிறார்களா? எல்லா மனிதர்களும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி மிகைப்படுத்தி காட்டுவதைத்தானே விரும்புகிறார்கள்?" 

ஆகவே, ருசோ சொல்வதுபோல் சுதந்திர மனிதன் இன்று சுதந்திர மனிதனாக இல்லாமல் போனதற்கு முதற்காரணம் இந்த பாழாய் போன கல்வி அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படாததால்தான் ஏகப்பட்ட சங்கதிக்களுக்குள் மாட்டிக் கொண்டு தவிக்கின்றான் என்று மாப்லி சொல்கிறார். 

நியாயம் தானே?

Sunday, October 24, 2010

கவிதை 1



      ¸¡¾ø 


±ý ¸ñ¸û ¯ý¨Éì

¸¡¾Ä¢ôÀ¾üÌÓý

±ý ¦¿ïºõ

§¿º¢òÐÅ¢ð¼Ð...


À¡÷¨Å¸û

§ÀÍžüÌ Óý ¿ÁÐ

¯ûÇí¸û §Àº¢Å¢ð¼É...


¯ý¨É ¦ÅýÈ ±ý¨ÉÔõ

±ý¨É ¦ÅýÈ

¯ý¨ÉÔõ ²§É¡ þó¾

¯Ä¸õ ÅçÅü¸Å¢ø¨Ä...


¯Ä¸õ Å¢ÕõÀ¡¾

±ý ¸¡¾¨Ä

þÆì¸×õ þø¨Ä...


þÈìÌõ ŨâÖõ

¯ñ¨Á¡ö §¿º¢ô§Àý

±ýÈ ¯Ú¾¢Ô¼ý

¯ý கை பிடிப்பேன்....

¿ÄÓ¼ý Å¡Æ ¨Åô§Àý.....

முதல்வர் கருணாநிதி வருத்தம்

வரி வடிவங்களாகவே உள்ள கலப்பு திருமணங்கள் : முதல்வர் கருணாநிதி வருத்தம்
                                                
""இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம், வெறும் வரிவடிவங்களாக உள்ளன. அதை விடுத்து, உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது சமுதாயத்தில் நடக்க வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.கார்த்திகேயன், ரேவதி ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: மணமக்கள் பற்றி ஸ்டாலின் பேசும் போது, "ஸ்டுப்பிட்' என்பதில் தான் இந்த காதல் ஆரம்பமானதாக சொன்னார். பொதுவாக, காதலிப்பதே முட்டாள்தனம் என்ற ஒரு தத்துவம் நாட்டில் இருக்கிறது. ஆனால், அது முட்டாள்தனம் அல்ல. முழுமையான அறிவின் எல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மணமக்கள் தங்களது வாழ்க்கையை நடத்துவர். இது கலப்புத் திருமணம் என்றனர். அந்தக் கலப்புத் திருமணத்தை இங்கு பாராட்டிப் பேசிய எத்தனை பேர் செய்து கொண்டனர் என்பதை தங்கள் நெஞ்சில் கை வைத்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், கலப்புத் திருமணத்தைப் பற்றி வானளாவப் பேசுகிறவர்கள், தங்கள் ஜாதியில், சொந்தத்தில் பெண் கிடைக்கிறதா, சொந்தத்தில் மணமகன் கிடைக்கிறானா என்று தான் கணக்கிடும் காலமாக இந்தக் காலம் இருக்கிறது.


இன்னும் நம் நாட்டில் காதல் திருமணம், கலப்புத் திருமணம் என்பதெல்லாம் வெறும் வரிவடிவங்களாக, வார்த்தை ஜாலங்களாக இருக்கின்றன. அதை விடுத்து உண்மையிலேயே காதல் திருமணம், கலப்புத் திருமணம் நமது நாட்டில், சமுதாயத்தில் நடக்க வேண்டும். இன்றைக்குச் சமத்துவபுரங்களை உருவாக்கியிருக்கிறோம் என்றால், அது ஏதோ ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தருகிறோம் என்றல்ல. அந்தச் சமத்துவபுரங்களிலே தான், கலப்புத் திருமணமே இன்று உருவாகிறது. சமத்துவபுரங்களில் உருவாகிற காதல், கலப்புத் திருமணங்களாக மாறி, அவர்கள் மூலம் இந்த நாட்டுக்கு கிடைக்கும் புதல்வர் கள் அல்லது புதல்விகள், எதிர்காலத்தில் இந்த தமிழகத்தை சமத்துவ பாதையில் நடத்திச் செல்லக் கூடிய வகையில் வளரக் கூடும் என்ற எண்ணத்தில் தான் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
                       


                                                                                                                            தினமலர்
                                                                ஜனவரி 19,2010,