அவள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிராமண சாதிப்பெண்.மும்பையில் அவள் குடும்பம் வசிக்கிறது.அவள் கேரளத்தின் ‘கீழ்ச்சாதி’யான ஈழவ சமூகத்தைச் சேர்ந்த பிரபு என்கிற இளைஞனைக் காதலித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டாள்.
ஆத்திரமடைந்த சாதி அவளுடைய அண்ணன் திலிப் திவாரியின் ரூபத்தில் தடியெடுத்து நின்றது.தங்கையின் செயலால் ஆத்திரமடைந்த திலிப் சுஷ்மாவின் வீட்டுக்குச் செல்கிறான்.அங்கே அவள் இல்லை.கர்ப்பிணியான அவள் அப்போது வெளியே போயிருந்தாள்.
அவளுடைய அன்புக்கணவன் பிரபு,பிரபுவின் அப்பா மற்றும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை அந்த இடத்திலேயே கொன்றுபோட்டுவிட்டு திலிப் வெளியேறினான் தன் கொலையாளிச் சகாக்களுடன்.
வெளியே போனதால் சுஷ்மா தப்பினாள்.அவள் அண்ணனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திப்போராடி மும்பை கோர்ட்டிலும் பின்னர் மராட்டிய உயர்நீதிமன்றத்திலும் போராடி அண்ணனுக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தருகிறாள்.
அவன் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறான்.சுப்ரீம் கோர்ட் தூக்குத் தண்டனை தேவையில்லை 25 ஆண்டு சிரை மட்டும் போதும் என்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளிக்கிறது:
The Supreme Court, explaining its decision to revoke the death sentence, said: “It is a common experience that when the younger sister commits something unusual and in this case it was an inter-caste, intercommunity marriage out of [a] secret love affair, then in society it is the elder brother who justifiably or otherwise is held responsible for not stopping such [an] affair.”
It added: “If he became the victim of his wrong but genuine caste considerations, it would not justify the death sentence... The vicious grip of the caste, community, religion, though totally unjustified, is a stark reality “
சாதிய சமூகத்தில் பாவம் அண்ணன்காரன் என்ன செய்வான்.ஆத்திரப்படத்தானே வேண்டியிருக்கிறது என்கிர தொனியிலான இத்தீர்ப்பு சாதி மீறிய காதலுக்கு எதிரான தீர்ப்பாக அமைந்துவிட்டது.சுஷ்மா மனம் தளர்ந்துவிடவில்லை.இன்னும் போராடிக்கொண்டிருக்கிறாள்.இது 1989ஆம் ஆண்டின் வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்துக்கே விரோதமான தீர்ப்பாகும். சமீபத்தில் பெங்களூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் நடத்திய இளம்பெண்கள் மாநாட்டில் பங்கேற்றுபேசிய அவர் நான் எனக்காகவும் என் 5 வயது மகள் த்ரிஷ்னாவுக்காகவும் மட்டும் போராடவில்லை.வரும் வரும் தலைமுறைக்காகப் போராடுகிறேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.அவர் வெற்றி பெற வேண்டும்.
கம்பத்து கட்டப் பஞ்சாயத்துத்தான் டெல்லியிலும் எதிரொலிக்கிறது. சட்டம் படித்துத்தான் நீதிபதிகளெல்லாம் கோர்ட்டுக்கு வருகிறார்களா?என்கிர கேள்வி நமக்கு எழுகிறது.இது உச்சநீதிமன்றம் அல்ல.உச்சிக்குடுமி நீதிமன்றம் என்று அன்று தந்தை பெரியார் சொன்னது 2010 லாவது பொய்யாக வேண்டாமா?
கண்களில் நீர்கசிந்தாலும் மனதை இறுக்கிக் கொண்டு போராடும் நம் அன்புமகள் சுஷ்மாவுடன் நம் எல்லோருடைய மனமும் துணை நிற்கிறது.
இந்துப் பத்திரிகை
மார்ச் 8


